நித்திரையை ஏற்றுக் கொண்டது என் உடலே.. உள்ளம் அல்ல. ஆறுதல் கூற வார்த்தைகளின்றி களைத்து போனதடி எனதுள்ளம். சிறு புன்னகை உதிர்த்து எனை மன்னித்து விடுவாய் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் உன் அழைப்புக்காக..! - ஹரி~ஜி
தீ தனில் தோன்றும் பிம்பம் வரைந்தது யாரோ..? நீர் தனில் தோன்றும் நிழல் படத்தை பிரதிபளித்தது யாரோ..? நீராய், பிழம்பாய் கனவுகள் மட்டும் தொடர்கிறது கண்விழித்து கட்டமைப்பதற்குள் கானல் நீராய் கலைந்து விட்டதன் காரணம் நானா? என் கனவா? பதில்கள் - மௌனம். ~ ஹரி. ஜி
அந்தியில் கதிரவன் கடலில் மூழ்கும் நேரம் என் விரல் அணைத்து உடை நனைய இட்டுச் சென்றாய்.. ஆர்பரிக்கும் இவ்வலைகள் மீண்டும் மீண்டும் என் பாதத்தை முத்தமிட என் இதயம் மெல்ல உன்னிடம் சங்கமமாகிறதடி... 💓💓💓💓💓💓💓💓💓💓