தேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ....? - மகாகவி பாரதியார்..
மனித வணக்கம் - கமல்ஹாசன் கவிதைகள் தாயே... என் தாயே! நான் மீட்ட சோலே! அறுத்த கொடியே குடித்த முதல் முலையே என் மனையாளின் மானசீகச் சக்கரவர்த்திசரண் தகப்பா – ஓ – தகப்பா நீ என...
அவள் இல்லாமல் சபிக்கப்பட்ட என் பொழுதுகள் விடிந்துகொண்டிருக்கின்றன ஏழு மணிக்கும் எட்டு மணிக்கும். ஜீவனில்லாத வீட்டுக்கு எத்தனை கதவு..? எத்தனை பூட்டு..? எப்போதும் ஊளையிடும் ஜன்னல் காற்றுகூட உன்னைத்தான் கேட்கிறது. நீ தொட்டெடுக்கக் காத்திருக்கும் வாசற்படி செய்தித்தாளாய் நான். அருகில் இருந்தாலும் அப்பால் இருந்தாலும் என் எழுத்துகளை கவிதையாக்கும் வல்லமை யாருக்கு வரும் உன்னைத் தவிர....! வாயால் ஊதுவார்களே காயத்தின்மீது வலி தாங்க... உன் நினைவுகளால் ஊதிக்கொள்கிறேன் என்னை. உறக்கமில்லாத இரவுகளுக்குத் தெரியும் என்னைப் பற்றி... இரக்கமில்லாத உறவுகளுக்கு என்ன தெரியும்? காற்றில் அடித்துக்கொள்ளும் காயப்போட்ட துணியாய் அலைகிறதென் மனது. உன் தீண்டலில் உயிர்த்திடக் காத்திருக்கும் நெருப்போடு... எரியாத அடுப்பும் பிறர் அறியாத என் துடிப்பும். நீ ஊர் திரும்பும் நாளை என் உயிர் திரும்பும் நாளாய் மாற்றுகிறதே... இந்தக் காதல். பிடித்து வைத்திருக்கிறேன் இந்த மூச்சை... உன் முந்தானைக் காற்றில் ...
Comments
Post a Comment