கண்ணதாசன் வரிகள்
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார்
அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றேயார் காணுவார்?...
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார்
அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றேயார் காணுவார்?...
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா
முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை
இங்கேயார் காணுவார்?...
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா
முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை
இங்கேயார் காணுவார்?...
சூறைக் காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு
இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை
இங்கேயார் காணுவார்?...
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு
இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை
இங்கேயார் காணுவார்?...
ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே!
நாமெல்லாம் அதன்மேலே!
- கண்ணதாசன்
Comments
Post a Comment